வியாழன், 22 மே, 2014

விசித்ரசித்தன் மேற்கொண்டு – ஒரு முன்னோட்டம்

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.

note: This is translation of Ayn Rands book The Fountain head. The book is in public domain and this Tamil translation is copyright to the author of this blog.



விசித்ரசித்தன்  மேற்கொண்டு  – ஒரு முன்னோட்டம்

பொதுவாக ஆங்கில நாவல்கள் முதல் 150-200 பக்கங்கள் கதை மாந்தர் அறிமுகம், களம் அமைப்பு என்று போகும். அதன்பிறகு கோர்வையாய்க் கதை புரிய ஆரம்பித்து விறுவிறுப்படையும்.

விசித்ரசித்தனும் அந்த வகையைச் சேர்ந்தது( 1930களில் எழுதப்பட்டது). சொல்லப்போனால் அமெரிக்க ஆங்கில நாவல்களுள் காலத்தால் முற்பட்டது. இன்று வருகிற பலவித நாவலின் கூறுகளையும் இதில் பார்க்கலாம். இன்னும் வர இருக்கிற தமிழ் மொழிபெயர்ப்பு அத்யாயங்கள் இன்னும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியவை. Mills&boon என்ற உலகளாவிய கனவுப் புத்தக விற்பனையாளர்களின் கதைக்கருவிற்கு முன்னோடியான நிகழ்ச்சிகள் முதல், தமிழில் நா பார்த்தசாரதியின் இலட்சியக் கதாநாயகன் வரை எல்லாவிதக் கூறுகளும் இக்கதையில் உண்டு. 

ஆங்கில மூலம் நான்கு பாகங்களாகக் கதையின் நான்கு முக்கிய பாத்திரங்களின் பெயருடன் இருக்கின்றன. இப்போது முதல் பாகம் – பீட்டர் கீட்டிங். மற்ற மூன்று கதாபாத்திரங்களும் கதைத் தலைவனான ஹோவர்ட் ரோர்க்குடன் இணைந்து கதையின் பாதையில் உடன் வருகிறார்கள். தலைவன் ஹோவர்ட் ரோர்க் தான் ‘விசித்ரசித்தன்’. சரியான தமிழ்த் தலைப்பைத் தேடியபோது ‘அவன்தான் மனிதன்’ என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. பிறகு மஹாபலிபுரம் கண்டதும் ‘விசித்ரசித்தன்’ (வடமொழிச் சொல் என்றாலும் பொருத்தமாக இருந்த படியால்) பற்றிக் கொண்டது. இந்தக் கதாநாயகனும் சிற்பவியலின் எல்லைகளைத் தாண்டித் தனி பாணி வகுத்துக் கொண்டு போகிறான். உற்றுப் பார்த்தால் ஹோவர்ட் ரோர்க் - கீதையில் ‘ஷேத்ரக்ஞ்ன்’ என்ற பதம் வரும். அதற்கு இலக்கணமான பாத்திரம்.

Ayn Rand அமெரிக்க திரைப்பட உலகில் வேலை பார்த்தவர். கதையைத் திரைக்குத் தகுந்த படியும் எழுதியுள்ளார். தமிழ்த் திரைப் படங்களின் court scene, அங்கே நீண்ட வசனங்கள் எல்லாவற்றுக்கும் முன்னோடி ‘The fountainhead’. 

இனி வரப்போகும் பகுதிகள் படிப் படியாய்க் களம் மாறிக் காலத்தில் ஓடி நீண்ட கதையாகப் போகின்றன. 

ஆங்கிலத்தில் படித்ததைவிடத் தாய்மொழியில் வாசிக்கும் போது இன்னும் அதிகம் இரசிக்கத்தான் முடிகிறது. நான் இரசித்ததை இங்கே உங்களுக்கு மீண்டும் தருவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாசியுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக