இந்தியாவில் அறிவியல் அறிஞனும் ஒரு நாள் மக்கள் தலைவனாக முடியும் என்று நிரூபித்த விஞ்ஞானி!
அரசியலில், தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டாமல் நின்று உயரம் தொட்ட ஞானி!
பிறந்த இடத்துக்கும், பேசிய மொழிக்கும், வளர்த்த விஞ்ஞானத்திற்கும் பெருமை சேர்த்த அபூர்வப் பிறவி!
ஆத்மா சாந்தியடையட்டும்! அவர் வாழ்க்கை இனிவரும் தலைமுறைக்கு வழிகாட்டி, எத்தனையோ பேருக்கு நம்பிக்கை ஒளியூட்டி, வாழ்வை வளம்பெற வைக்க வேண்டும்!