'குளிகை' என்ற தமிழ்ச்சொல்
மாத்திரை என்று நாம் பொதுவாக அழைக்கிற மருந்து வில்லையைக் குறிக்கும். முன்
காலத்தில் மருந்து உருட்டி உருண்டையாக 'குளிகை' என்ற அளவில்
கொடுக்கப்பட்டது. Tablet என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் இந்தப் பொருள் உண்டு.
முன் காலத்தில் களிமண் தட்டுகள்
செய்து அதில் எழுத்தைப் பொறித்து சுட்டு அவற்றைப் பாதுகாப்பது வழக்கம். அந்தத்
தட்டுகளுக்கு Tablet என்று ஆங்கிலத்தில் வழக்கம். கணினி வகையில் இப்படித்தான்
சின்னத் தட்டுக்கள் போன்ற உருவத்தில் கைவிரல் தொட்டு எழுதி இயக்க முடிகிற
கணினிக்கு Tablet என்ற பழைய சொல் மீண்டும் வழக்கிற்கு வந்தது. இதைப் பின் பற்றினால்
நாமும் சுவடி என்ற பொதுச் சொல்லை மீண்டும் வழக்கத்திற்குக் கொண்டுவரலாம். ஓலைச்
சுவடி, அரிச்சுவடி என்பதைப் போன்றே சுவடி என்ற பொதுச்சொல்லை எடுத்துக் கொண்டு,
மின் சுவடி அல்லது, கணிச்சுவடி என்று கூடப் பெயரிட்டுக் கொள்ளலாம். அதை
விட்டுவிட்டு ‘குளிகை’ என்று மொழி மாற்றம் செய்து விழிபிதுங்க விடுவது சரியில்லை.
இனி Tablet (as in smart devices)
என்பது ‘கணிச்சுவடி’.
Netbook என்பது ‘வலைச்சுவடி’