புதன், 26 பிப்ரவரி, 2014

மறுமொழி



மனதின் உள்ளே மறுமொழி ஓடுது
மருண்ட பார்வை
மௌனம் காக்குது
தப்பு என்று சொல்லத் தயங்கி
மனமொழி மௌனமாய்
மறுமொழி பேசுது
பூட்டிய வாயும்
ஆட்டிய தலையும்
காட்டிய இணக்கம்
எனப் பொருள் கொண்டு
ஆள்பவனை ஆளவிட்டு
அழுபவன் அழுகின்றான்
வாய் திறக்க
தலை அசைக்க
கை உயர்த்திக் கருத்துரைக்க
கதியற்ற கதிரவன்கள்
கருகிப் போவது இப்படித்தான்
இவன்
மௌனம் சம்மதமாய்
பரம்பரையாய் ஆளுகின்றான்
வாய் திறக்கப் பயந்தவன்
மன அலையில் இழுபட்டு
மணல் வாரித் தூற்றிவிட்டு
கரையோரம் களைத்துப் போய்
கனவோடு உறங்குகின்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக