தமிழகத்தில் இப்போது இளங்கோவடிகள்
வார்த்தை விளங்கிக் கொண்டிருக்கிறது.
“அரசியல் பிழைத்தோற்கு
அறம் கூற்றாகும்
…
ஊழ்வினை உறுத்து
வந்து ஊட்டும்”
தசரதனுக்கு புத்திர
சோகமாக ஊழ்வினை. திருதராஷ்டிரனுக்கு அரசு, தர்மம் எல்லாம் கடந்த புத்திர பாசம். குலத்தை,
தேசத்தை – ஒட்டு மொத்த பாரத கண்டத்தையுமே பல காதம் பயணித்து குருஷேத்திரத்தில் குவிந்து
– அழிவில் தள்ளிய யுத்தத்தில் கொண்டு விட்டது. எல்லாம் பார்த்துவிட்டுத்தான் போகமுடியும்.
படிப்பறிவு, பட்டறிவு,
பகுத்தறிவு - சகலமும் துறந்த பாசப்பிணைப்பு! பதவி, பதவி, அதிகாரம் என்று குவிந்து விட்டால்
… மனிதன் .. அவன்தான் .. அதுதான் … மனிதன்!! ம்ம்ம்??? இதில் யார் பாவம்? என்னவோ பாவமும்தான்
தோன்றுகிறது. இதுவும் … மனிதம்தானா!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக