சனி, 22 பிப்ரவரி, 2014

என் தீபம் - கவிதை



நினைவுகள்தான் கலையட்டுமே
கனவுகள்தான் நிறையட்டுமே
காற்றுப்படாத கறுத்த வானத்தில்
என் தீபம்
கண் சிமிட்டுகிறது!
எரிகிற தீபம் எரியட்டுமே
அசைகிற பூமி அதிரட்டுமே
திரும்பிச் சுழலும் காலச் சக்கரம்
வெறுமையில் கடந்து
வெளிச்சம் கலைத்து
உண்மை தெரியுது பார்
என்
கைவிளக்கொளியில்
மையிருள் கலைந்து
மனம் நிறையுது பார்
கருத்த நிலவை உடைத்துச் சிதறிய
காலம் சிரிக்குது பார்
கையில்
வீரம் கொடுக்குது பார்
கொடுத்ததை விலைக்குக் கேட்குது பார்
விலை கொடுத்ததும்
வினை எனச்சொல்லி
விளக்கம் கேட்குது பார்
கொடுத்த விளக்கம்
குறையில்லாமல்
நினைவாய் நிலைக்குது பார்
அந்த
நினைவுகள்தான் கலையட்டுமே
கனவுகள்தான் நிறையட்டுமே …

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக