வியாழன், 26 ஜூன், 2014

இன்றைய திருக்குறள்






Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.




இன்றைய திருக்குறள்
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

மனதில் நினைப்பது உயரியதாக, பெரியதாக இருக்க வேண்டும். மற்றபடி அது நிறைவேறுமா முடியாதா என்று நினைத்து பெரிதாக நினைக்கப் பயப்படக் கூடாது என்பது பொருள்.

பெரிதாக நினைக்கப் பயப்படுபவர்கள் நிறையப்பேர். சிறிதாக ஆரம்பித்துப் பெரிதாக வளர்ந்து நிற்கும் நிறுவனங்களின்(வியாபார நிறுவனங்கள் மட்டுமில்லை. கட்சி, மதம், இயக்கம் எல்லாமே நிறுவனம் தான்)பின்னனியில் இந்த ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் குணம் உள்ளது. வந்தது வரட்டும் என்று இறங்கி வேலை பார்க்கிற திறன்! கர்மம் செய் பலன் எதிர் பாராதே என்று கீதை சொல்லுவதைப் போல, சில சமயம், பலன் என்ன ஆனாலும் சர் என்று அபாயத்தில் இறங்கி, இதுதான் என் குறிக்கோள் என்று இறங்குபவர்களுக்கு வெற்றி தானாக அமைகிறது. வேண்டி விரும்பிப் போவதில்லை.

ஒரு காரியம் வேண்டும் என்று நினைத்து இறங்கி வேலை பார்த்தால் தானாக ஒரு நாள் கிடைக்கும். என்னால் முடியாது என்றால் – முடியாது. முடியைக் கட்டி மலையை இழுக்கிற policy. வந்தால் மலை; போனால் .. என் நேரத்தில் என் உழைப்பைச் செலவிட்டு முயலுகிறேன். ஆகவே நட்டமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக