ஞாயிறு, 30 மார்ச், 2014

துளிக்கனவு




குறிப்பு: விசித்ரசித்தன் அடுத்த அத்யாயம் செவ்வாயன்று ..

துளிக்கனவு

விளக்கொளியின் விளக்கத்தில்
விழியோரம் துளிக் கனவு!
இருள் வென்ற போதையிலே
மயக்கமாய் விளக்கசைவு!
வேம்பு பூத்திருக்கு
விலையில்லாக் காத்திருக்கு
கதிர் முற்றிக் கருக்கொண்டு
களவுக்குச் சேதி சொல்லி
விழியமர்த்த முடியாமல்
விளைத்தவனை நிறுத்திவைக்க
பனை மரத்து நிழலடியில்
பகல் நேரம் பழி கிடந்து
வெயில் போன பின்னாலே
வெளியேறி நடை போன
விளக்கொளியின் விளக்கத்தில் …

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக