குறிப்பு:
குறைந்த அளவு அதிகாரங்கள் மட்டுமே பத்துக் குறளும் ஒரு கோர்வையான கருப்பொருளாக இருக்கும். அதில் இந்த அதிகாரம் 100% கோர்வையாக ஒற்றைப் பொருளைச் சொல்வது.
1. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
(மருத்துவ) நூல் பயின்றோர் முக்கியம் என்று
கருதிய வளி (வாயு?) முதலிய மூன்றில் ஏதேனும் அளவு கூடினாலும் குறைந்தாலும் நோய் ஏற்படும்.
குறிப்பு: இதில் எந்த மூன்று என்பது சொல்லப்படவில்லை.
உரையாசிரியர்கள் வெவ்வேறு பொருள் கொள்கிறார்கள்.
The learned (medical practioners) perceive that, all body
disorders are due to increase or decrease in any one of the said three vitals
including Gas(in a body).
2. மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
ஏற்கனவே அருந்திய உணவானது, செரித்து வெளியேறிவிட்டது
(அற்றது) என்பதன் அறிகுறிகளைத் தெரிந்து - எ.கா: பசி எடுப்பது, செய்யப்போகின்ற வேலைக்கு
இந்த சக்தி போதாது என்று புரிவது, இப்படியாக - அதன்பிறகு உண்டால், உடலுக்கு மருந்து
என்பது தேவைப்படாது.
Body
needs no medicine, for thy eats only upon digesting previous meal.
3. அற்றால் அளவறிந்து உண்க: அஃதுடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.
இப்படிச் செரித்து விட்டால், அதுவே தேவையான
அளவு உணவு என்பதை அறிந்து அந்த அளவையே தொடர்ந்து உண்ணுங்கள்; அதுவே உடம்பு வைத்திருப்பவர்கள்
நீண்ட காலம் அதைப் பேணிப் பாதுகாக்ப்பதற்கான வழியாகும்.
Know
that such digestible food is your limit, and that is way to live longer.
4. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து.
இப்படியாக செரிமானத்தின் அடிப்படையில்
அறிந்து தெளிந்து, உணவு, அதன் காலம், அளவு இவற்றை நிர்ணயம் செய்து கொண்டு அதை மாறாமல்
கடைப்பிடித்து வந்தால் நன்றாகப் பசித்து, உணவை அனுபவித்து(துய்த்து) உண்ண முடியும்.
Know
your digestive limit, type of food, timing, and quantity and make it regular,
you can enjoy food with good appetite.
5. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
இப்படியாக மாறுபாடு இல்லாத உணவை இடையிடையே
உணவு மறுத்து (உண்ணா நோன்பிருந்து) வந்தால். உயிருக்கு எவ்விதத் தீங்கும் நேராது.
If
such food habit is followed with fasting now and then, there will be no harm to
life.
6. இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.
தன் உடம்பிற்கு ஏற்ற இந்தக் 'இழிவு' என்னும்
குறைந்த அளவினை (Minimal)அறிந்து உண்பானிடம் இன்பம் தங்கும், அதைப் போலவே 'கழிவு' என்னும்
அதிக பட்ச அளவு (Maximum) உணவை உண்பானிடம் நோய் சென்று தங்கிவிடும்.
One who knows the minimal food for his body and
following it will enjoy life ; likewise the one who take unlimited food will
fall into perpetual illness..
7. தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோயளவு இன்றிப் படும்.
இப்படித் தன் வயிற்றினால் செரிக்கப்படும்
அளவைத் (தீயளவு) தெரிந்து கொள்ளாமல் பேரதிகமாக உண்டால் அளவற்ற நோய் பீடிக்கும்.
If
you eat more and more without knowing the digestive power of your body, you
will experience all kind of bodily disorders.
8. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என்னதான்
இந்த நோய், இது வந்ததற்கான ஆதி காரணம் எண்ண என்பதை ஆராய்ந்து, பிறகு அதைத் தணிக்கும்
வழியைத் திட்டமிட்டுப் பிழையில்லாமல் பின்பற்றினால் நோய் தீரும்.
Find out the disorder, its route cause and then find the
way to remedy it.
9. உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
வயது முதலான நோயுற்றவனது அளவுகளையும்,
தாக்கம் முதலிய நோயின் அளவுகளையும், நோய் பீடித்த கால அளவையும் கருத்தில் கொண்டு மருத்துவம்
பார்க்க வேண்டும்.
The Learnt consider the nature of patient, disorder and
its duration before acting upon it.
10. உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.
நோயுற்றவன், நோயைத் தீர்க்கும் மருத்துவன்,
மருந்து மற்றும் அந்த மருந்தினைக் கொடுத்து நோயாளியைக் கவனித்துப் பேணுபவர் என்ற நான்கும்
சேர்ந்ததுதான் மருந்து.
The
patient, the physician, the medicine and the nurse are the four parts of
medicine.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக